பாமக தலைவர் அன்புமணியை தரக்குறைவாக தொண்டர் பேசும் ஆடியோ வைரல்

நல்லம்பள்ளி: தர்மபுரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணியை தரக்குறைவாக தொண்டர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி, கடந்த வாரம் 3 நாட்கள் பிரசார நடைபயணம் நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த 20ம் தேதி நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் மேடை அமைத்து அன்புமணி பேசுவதற்கு ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அன்று இரவு பாமக தலைவர் அன்புமணி அங்கு அரை மணி நேரம் பேசினார்.

அப்போது மேடையில் நிற்பது குறித்து கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பாமக தொண்டர்கள் இருவர் தொலைபேசியில் அன்புமணியை தரக்குறைவாக பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாமக தலைவரை தொண்டரே தரக்குறைவாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவுவது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.