சென்னை
:
இளையராஜா
தன்னுடைய
1500வது
படத்தை
நோக்கிய
பயணத்தை
தொடர்ந்து
வருகிறார்.
ஆதிராஜன்
இயக்கத்தில்
பிரஜன்
மற்றும்
மனிஷா
யாதவ்
போன்றவர்கள்
இந்தப்
படத்தில்
லீட்
கதாபாத்திரங்களில்
நடித்து
வருகின்றனர்.
நினைவெல்லாம்
நீயடா
என்று
பெயரிடப்பட்டுள்ள
இந்தப்
படத்தின்
சூட்டிங்
தற்போது
நிறைவடைந்துள்ளது.
இசைஞானி
இளையராஜா
இசைஞானி
இளையராஜா
இசை
எப்போதுமே
மனதை
மயக்கும்
வல்லமை
கொண்டது.
பல
ஆண்டுகளாக
மக்களின்
இன்பம்,
துன்பம்
அனைத்திலும்
இளையராஜாதான்
இணைந்துள்ளார்.
அவர்
ஆயிரத்திற்கும்
மேற்பட்ட
படங்களில்
இசையமைப்பாளராக
பணியாற்றியுள்ளது
தெரிந்த
விஷயம்
தான்.

இளையராஜாவின்
1417வது
படம்
ஆனால்
அவரது
1417வது
படம்
நினைவெல்லாம்
நீயடா
படம்
துவங்கப்பட்டு
தற்போது
சூட்டிங்கும்
நிறைவடைந்துள்ளது.
ஆதிராஜன்
இயக்கத்தில்
பிரஜன்,
மனிஷா
யாதவ்
இந்தப்
படத்தில்
லீட்
ரோல்களில்
நடித்துள்ளனர்.
மேலும்
சினாமிகா
என்பவரும்
இந்தப்
படத்தில்
அறிமுகமாகிறார்.
ரோகித்
-யுவலட்சுமி
என்ற
புதுமுகங்களும்
இந்தப்
படத்தில்
நடித்துள்ளனர்.

முக்கிய
கேரக்டரில்
ஆர்வி
உதயகுமார்
மேலும்
ரெடின்
கிங்ஸ்லியும்
இந்தப்
படத்தில்
காமெடி
கலாட்டா
செய்துள்ளார்.
மனோபாலா,
முதத்துராமன்
உள்ளட்டவர்கள்
இணைந்துள்ள
இந்தப்
படத்தை
லேகா
தியேட்டர்ஸ்
நிறுவனம்
சார்பில்
ராயல்
பாபு
தயாரித்துள்ளார்.
முக்கியமான
கேரக்டரில்
பிரபல
இயக்குநர்
ஆர்வி
உதயகுமாரும்
நடித்துள்ளார்.

இளையராஜா
எழுதிய
பாடல்
இந்தப்
படத்திற்காக
பழனி
பாரதி,
சினேகன்
உள்ளிட்டவர்கள்
பாடல்
எழுதிய
நிலையில்
இளையராஜாவும்
இதயமே
இதயமே
என்ற
பாடலை
எழுதியுள்ளார்.
அந்தப்
பாடலை
அவரது
மகன்
யுவன்
சங்கர்
ராஜா
பாடியுள்ளார்.
படம்
பள்ளிப்
பருவத்தில்
தோன்றும்
முதல்
காதலை
மையமாக
வைத்து
உருவாகியுள்ளது.

ரசிகர்கள்
ஆர்வம்
படம்
சென்னை,
கொடைக்கானல்,
திருப்போரூர்,
திருமழிசை
ஆகிய
இடங்களில்
தொடர்ந்து
41
நாட்கள்
படமாக்கப்பட்டுள்ளன.
விரைவில்
இந்தப்
படத்தின்
பாடல்கள்,
ட்ரெயிலர்
உள்ளிட்டவை
வெளியாகவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில்
இசைஞானியின்
வரிகளில்
உருவாகியுள்ள
பாடலை
கேட்க
ரசிகர்கள்
ஆர்வம்
காட்டி
வருகின்றனர்.

நவம்பரில்
ரிலீஸ்
படத்தின்
டப்பிங்
பணிகள்
சிறப்பாக
நடைபெற்று
வருகின்றன.
வரும்
நவம்பரில்
படத்தை
ரிலீஸ்
செய்ய
தயாரிப்பு
தரப்பு
திட்டமிட்டுள்ளது.
மனிஷா
யாதவ்
இந்தப்
படத்தில்
வித்தியாசமான
கேரக்டரில்
நடித்துள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
முன்னதாக
அவருடைய
புகைப்படங்கள்
வெளியாகி
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்தன.