தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்…


நடந்து செல்லும்போது இளம்பெண் ஒருவர் மீது தெரியாமல் இடித்ததற்காக சீக்கிய முதியவர் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அவரைத் தாக்கியவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சீக்கிய முதியவர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை முந்தும்போது தெரியாமல் அந்தப் பெண்ணின் கைமீது இடித்துவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணின் காதலன் அந்த முதியவரைப் பின்தொடர்ந்துள்ளார். பட்டப்பகலில் அவர் அந்த முதியவரை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

Credit: GREATER MANCHESTER POLICE

62 வயதான அந்த சீக்கியர், இரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்திருக்கிறார்.

ஜூன் மாதம் 23ஆம் திகதி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், மூளையில் காயம்பட்ட அந்த முதியவர் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறாராம். அடிபட்ட பிறகு அவர் இதுவரை ஒரு வார்த்தையும் பேசவில்லையாம்.

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE

அந்த முதியவர் தாக்கப்பட்ட CCTV கமெரா காட்சிகள் மற்றும் சந்தேக நபர்களாகிய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
 

வீடியோவை காணhttps://www.thesun.co.uk/news/19695481/shocking-moment-man-left-for-dead/

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.