கேரளாவின் ஆழப்புழாவில் இன்று நடக்கிறது பிரபலமான பாம்புப் படகுப் பந்தயப் போட்டி !

கேரளாவில் பிரபலமான நேரு டிராபி படகு போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர் என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில்  நடைபெற உள்ளது.  20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படகுப் பந்தயப் போட்டி நடைபெறாததால், இதனை நேரில் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் ஆழப்புழாவிற்கு வந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.