சென்னை
:
நடிகர்
சூர்யா
சிறப்பான
நடிப்பை
கொடுத்து
வருகிறார்.
இதன்மூலம்
இவரது
ரசிகர்கள்
வட்டம்
மிகவும்
அதிகமாக
உயர்ந்துள்ளது.
தொடர்ந்து
நடிகராகவும்
தயாரிப்பாளராகவும்
இவர்
கெத்து
காட்டி
வருகிறார்.
இவரது
ரசிகர்கள்
இவரை
கொண்டாடி
வருகின்றனர்.
இவர்
திரைத்துறையில்
நுழைந்து
தற்போது
25
வருடங்களை
பூர்த்தி
செய்யவுள்ளார்.
இவரது
முதல்
படம்
நேருக்கு
நேர்
கடந்த
1997ம்
ஆண்டு
செப்டம்பர்
6ம்
தேதி
ரிலீசானது.
நடிகர்
சூர்யா
நடிகர்
சூர்யா
நேருக்கு
நேர்
என்ற
படத்தில்தான்
தன்னுடைய
அறிமுகத்தை
கொடுத்திருந்தார்.
வசந்த்
இயக்கத்தில்
இந்தப்
படம்
கடந்த
1997ம்
ஆண்டில்
வெளியானது.
இந்தப்
படத்தில்
விஜய்,
சிம்ரன்,
கௌசல்யா
என
முன்னணி
நடிகர்களுடன்
இணைந்து
நடித்திருந்தார்
சூர்யா.

நேருக்கு
நேர்
படம்
இந்தப்
படம்
இவருக்கு
சிறப்பாக
அமைந்த
நிலையில்,
அடுத்தடுத்த
படங்கள்
தோல்வியையே
கொடுத்தது.
இதனால்
சினிமாவில்
தன்னை
நிலைநிறுத்திக்
கொள்ள
இவர்
அதிகமான
போராட்டங்களை
சந்திக்க
வேண்டியிருந்தது.
பாலா
இயக்கத்தில்
கடந்த
2001ம்
ஆண்டில்
வெளியான
பிதாமகன்
படமே
இவரை
நடிகராக
ரசிகர்கள்
ஏற்றுக்
கொள்ள
வைத்தது.

அடுத்தடுத்த
சிறப்பான
படங்கள்
தொடர்ந்து
காக்க
காக்க,
பிதாமகன்,
ஆய்த
எழுத்து
என
அடுத்தடுத்த
வித்தியாசமான
கதைக்களங்களில்
இவர்
நடித்த
படங்கள்
இவரை
அதிகமான
ரசிகர்களிடம்
கொண்டு
சேர்த்தது.
தொடர்ந்து
தன்னுடைய
கதைகளை
ரசிகர்களின்
நாடித்துடிப்பை
உணர்ந்து
தேர்வு
செய்து
நடித்து
வருகிறார்
சூர்யா.

ஜோதிகாவுடன்
காதல்
திருமணம்
இதனிடையே
நடிகை
ஜோதிகாவையும்
காதலித்து
பெற்றோர்
சம்மதத்துடன்
திருமணம்
செய்துக்
கொண்டார்.
இவர்களுக்கு
தேவ்,
தியா
என
இரண்டு
குழந்தைகள்
உள்ளனர்.
தற்போது
தயாரிப்பாளராகவும்
மாறியுள்ள
சூர்யா,
சிறப்பான
படங்களை
தயாரித்தும்,
விநியோகித்தும்
வருகிறார்.

சூப்பர்ஹிட்
படங்கள்
இவரது
அடுத்தடுத்த
படங்கள்
ரசிகர்களின்
நாடித்துடிப்பை
எகிற
செய்து
வருகிறது.
சூரரைப்
போற்று,
ஜெய்பீம்,
எதற்கும்
துணிந்தவன்
என
அடுத்தடுத்த
வித்தியாசமான
கதைக்களங்களில்
நடித்து
ரசிகர்களை
உற்சாகப்படுத்திய
சூர்யா,
சமீபத்தில்
வெளியான
விக்ரம்
படத்தில்
ரோலக்ஸ்
என்ற
கேரக்டரில்
மிரட்டியிருந்தார்.

மிரட்டிய
ரோலக்ஸ்
கேரக்டர்
சில
நிமிடங்களே
வந்தாலும்
அந்தக்
கேரக்டரில்
சூர்யா
நடித்தது
அவரது
ரசிகர்களை
மேலும்
உற்சாகப்படுத்தியுள்ளது.
விரைவில்
இந்தப்
படத்தின்
அடுத்த
பாகம்
உருவாகவுள்ளதும்
அதில்
சூர்யா
லீட்
கதாபாத்திரத்தில்
நடிக்கவுள்ளதும்
முன்னதாகவே
அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவை
இதுபோன்ற
கேரக்டரில்
பார்க்க
அவரது
ரசிகர்கள்
ஆர்வம்
காட்டினர்.

25
ஆண்டுகளை
கடந்த
சூர்யா
இந்நிலையில்
நடிகர்
சூர்யா
திரையில்
நடிக்கத்
துவங்கி
25
ஆண்டுகளை
நாளைய
தினம்
கடக்கவுள்ளார்.
இதையடுத்து
அவருக்கு
வாழ்த்துக்கள்
குவிந்து
வருகிறது.
சன்
டிவியும்
எதற்கும்
துணிந்தவன்
படத்தின்
போஸ்டருடன்
அவருக்கு
வாழ்த்துக்களை
பகிர்ந்துள்ளது.
தொடர்ந்து
ரசிகர்கள்
தங்களது
வாழ்த்துக்களை
பகிர்ந்து
வருகின்றனர்.

ரசிகர்கள்
வாழ்த்து
சூர்யாவின்
ஆரம்பம்
முதலான
பல
படங்களின்
கோர்ப்பாக
வீடியோக்கள்
உருவாக்கப்பட்டு
பகிரப்பட்டு
வருகின்றன.
மிகவும்
சிறப்பாக
இந்த
வீடியோக்கள்
ரசிகர்களின்
கைவண்ணத்தில்
சிறப்பாக
உருவாக்கப்பட்டுள்ளன.
#25yearsofsuryaism
உள்ளிட்ட
ஹேஷ்டேக்குகளும்
ட்ரெண்டாகி
வருகின்றன.

இளமையான
சூர்யா
நடிகர்
சூர்யா
தன்னுடைய
40களில்
உள்ளார்.
ஆனாலும்
தன்னுடைய
உடலை
சிறப்பாக
மெயின்டெயின்
செய்து
வருகிறார்.
இளம்
நாயகனாகவும்
அடுத்தடுத்து
6
பேக்ஸ்
நாயகனாகவும்
இவரை
பார்த்து
ரசித்த
ரசிகர்கள்
தற்போது
மெச்சூர்டான
நடிப்பிலும்
சூர்யாவை
கொண்டாடி
வருகின்றனர்.
என்ன
ஆனாலும்
தற்போதும்
தன்னுடைய
அழகு
மற்றும்
கம்பீரத்தால்
ரசிகர்களை
அதிகமாக
கவர்ந்து
வருகிறார்
சூர்யா.