தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.5) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி:  ராஜகீழ்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, கனகராஜ் தெரு, ஆலவட்டம்மன் கோயில் தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர்:  தரமணி குறிஞ்சி நகர் மற்றும் சி.பி.ஐ காலனி.

எண்ணூர் பகுதி:  கத்திவாக்கம், காட்டுக்குப்பம், சாஸ்திரி நகர், சிவன்படை வீதி, காமராஜ் நகர், வ.உ.சி.நகர், எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், ஈ.டி.பி.எஸ் குடியிருப்பு, சண்முகபுரம், மதுரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மாதவரம் பகுதி:  வெங்கடேஷ்வரா காலனி 1, 2, 6 முதல் 10 வது தெரு, பின்னி நகர் 1வது  மற்றும் 2வது தெரு, பெரியார் நகர்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.