காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அழகர் நகர் பகுதியில் வசிப்பவர் கோபிநாத். இவர் புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். கோபிநாத் குடும்பத்துடன் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது அவரின் வீட்டில் இருந்த பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் அந்த பகுதியில் நடந்த 7வது கொள்ளை சம்பவம் இது என்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.