கரூர்: இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கிய புலியூர் பேரூராட்சியின் தலைவராக திமுகவின் புவனேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புலியூர் பேரூராட்சிக்கு திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய கம்யூ.கவுன்சிலர் கலாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
