டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு சிறப்பு வரவேற்பு

செய்யூர்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும், மாநில  அளவில் பள்ளிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. இந்த 10 பேரில் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள சாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதாவும் ஒருவர்.

இந்நிலையில், விருது பெற்ற தலைமை ஆசிரியை கவிதாவிற்கு சாலையூர் ஊராட்சி மக்கள் அவருக்கு  சிறப்பு வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி நேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தல், மாணவர்களுக்கு புரியும் வகையில் கல்வி புகட்டுதல், பள்ளியை தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றிக்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.