புர்கினா பாசோவில்குண்டுவெடிப்பு: பலி 35| Dinamalar

ஓகாடவ்கோ: புர்கினா பாசோவில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ மிகுந்த வறுமை நிலையில் உள்ளது. அல்கொய்தா மற்றும் பல்வேறு அடிப்படைவாத இயக்கங்கள் அவ்வப்போது தங்களுக்குள் மோதிக்கொள்வது மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றன. தலைநகர் ஓகாடவ்கோவில் இருந்து பொதுமக்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது குண்டுகள் ஏற்றி வந்த வாகனம் மோதி வெடித்தது. இதில் 35 பேர் பலியாகினர்.

அமைதியின்மை காரணமாக புர்கினா பாசோ குடிமக்களில் 10 சதவீதம்பேர் பல்வேறு நாடுகளில் அகதிகளாக சென்று விட்டனர். இதுவரை 1.9 மில்லியன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.