ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து!

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஓணம் பண்டிகை சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் கொடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஓணம் பண்டிகை இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், கேரளா மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.