ஓணம் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வாழ்த்து செய்தி: சக குடிமக்களுக்கு, குறிப்பாக மலையாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். புதிய அறுவடையைக் குறிக்கும் ஒரு பண்டிகை, ஓணம் சமத்துவம் மற்றும் உண்மையின் மதிப்புகளைக் கொண்டாடுகிறது. இந்த பண்டிகை சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி: அனைவருக்கும், குறிப்பாக கேரளா மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாளி சமூகத்தினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளியான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.