மின் கட்டண உயர்வு: எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு 2026-27 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும்.

300 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 145 ரூபாயும், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 295 ரூபாய் வசூலிக்கப்படும்.

500 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 595 ரூபாய் வசூலிக்கப்படும்.

600 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாய் வசூலிக்கப்படும்.

700 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாய் வசூலிக்கப்படும்.

800 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாய் வசூலிக்கப்படும்.

900 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 1130 வரை வசூலிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.