"எங்களுக்கு சோறுபோடுங்க போதும்; தலையில தூக்கிவைச்சு கொண்டாடாதீங்க”-நடிகர் சத்யராஜ் காட்டம்

“எங்களுக்கு சோறு போடுங்கள் போதும்; தலையில் வைத்து கொண்டாடாதீர்கள்” என நடிகர் சத்தியராஜ் பேசியுள்ளார்.
ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவையை தொடக்க விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், “நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி உருவாகுவது முக்கியம். அதற்கு தடையாக எது இருந்தாலும் நீக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார். தொடர்ந்து சத்தியராஜிடம், தொடர்ச்சியான தற்கொலை செய்திகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
image
அதற்கு அவர், “ஒரு சினிமா நடிகருக்கு ஐன்ஸ்டீன் அளவிற்கு தெரியும் என நினைத்துக் கொள்வது இச்சமூகத்தின் மிகப்பெரிய தவறு. நடிகர்களை ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் என்றால் நடிப்போம் நாங்கள். ஆகவே எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள்; தலையில் வைத்து கொண்டாடுவது வேண்டாம். இது எனக்கு ஊடங்களின் மீதுள்ள வருத்தம். நாங்கள் யாரும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது வேறு ஏதும் அறிஞர்களோ இல்லை. அதை புரிந்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு நான் தான் ராஜா. இந்த நிகழ்ச்சியை திசை திருப்பி வேறெங்கோ கொண்டு செல்கிறீர்கள். செய்தியாளர்களுக்கு சமூக அக்கறை இல்லை” என காட்டமாக பதில் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “என்னிடம் வாயை பிடுங்க முடியாது” என காரசாரமாக பேசினார். இது அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.