நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் 3 பேர் கைது!

டெல்லியில் நிழலுக தாதா லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலுடன் போலீசார் நடத்திய நீண்ட நேரத் துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

ரோகிணி பகுதியில் லாரன்ஸ் பிஷ்நோயின் கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையின் சிறப்பு செல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ஆயுதம் ஏந்திய காவல் படையினர் மூன்று பேரையும் சரண் அடைய வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது.

இறுதியாக மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசா கொலை வழக்கில் இவர்கள் தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.