ஆவின் முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை… உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், எனவே தனக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் அவர் கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதித்தால் ராஜேந்திர பாலாஜி வழக்கின் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைக்க நேரிடும் என்று வாதாடகாய் முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் ஜே.பி. பார்திபாலா விசாரணை அதிகாரியிடம் தெரிவித்த பிறகு தமிழ்நாட்டிற்கு உட்பட்ட இடங்களுக்கு ராஜேந்திரபாலாஜி செல்லலாம் என்று  தகவல்கள் அளித்தனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். காலாவதி ஆகிவிட்ட ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்தாலும் அட்டஹனை அவரிடம் வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாட்சியங்களை கலைக்க முயற்சிக்ககிக்கூடாது என்று ராஜேந்திர பாலாஜிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.