பெங்களூரு: செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஹிந்தி தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
