ஜபல்பூர், :மத்திய பிரதேசத்தில், பண மோசடி வழக்கில் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜபல்பூர் மாவட்டத்தில் பி.சி.சிங் என்ற பாதிரியார் உள்ளார். இவர், முன்பு கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்தபோது, மாணவர்களிடம் இருந்து வசூலித்த கட்டணமான ௨.70 கோடி ரூபாயை மோசடி செய்து, தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து கடந்த மாதம் அளிக்கப்பட்ட புகாரின்படி, பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ௧.60 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயத்தில், பாதிரியார்ஜெர்மனிக்கு சென்றிருந்தார்.அங்கிருந்து நேற்று இந்தியா திரும்பிய அவரை, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்
. இந்நிலையில், ”மத மாற்றம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோதச் செயல்களுக்காக அந்த பணம் பயன்படுத்தப்பட்டதா என பாதிரியாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது,” என, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement