ஆர்மீனியா மீது அசர்பைஜான் தாக்குதல்: 49 வீரர்கள் பலி| Dinamalar

மாஸ்கோ:”எங்கள் படையினர் மீது, அசர்பைஜான் ராணுவத்தினர் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில், ௪௯ வீரர்கள் கொல்லப்பட்டனர்,” என ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யன் தெரிவித்தார்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே, நாகோர்னோ கராபாக் என்ற பகுதியின் உரிமை குறித்து, பல ஆண்டுகளாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த, 2020ல் ஆறு வாரங்கள் நடந்த யுத்தத்தில், 6,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அசர்பைஜான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ முகாம்கள் மீது ஆர்மீனியா படையினர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதிகளில் கண்ணி வெடிகளையும் வைத்தனர். எனவே தான் நாங்கள் பதிலடி கொடுத்தோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.