சென்னை
:
மெகா
ஸ்டார்
சிரஞ்சீவி
நடிப்பில்
உருவாகி
உள்ள
காட்ஃபாதர்
திரைப்படம்
குறித்த
முக்கியமான
தகவலை
படக்குழு
வெளியிட்டுள்ளது.
அரசியல்
திரில்லர்
கதையில்
உருவாகி
இருக்கும்
இந்த
படத்தில்
நயன்தாரா
முதன்மை
வேடத்தில்
நடித்துள்ளார்.
முக்கிய
வேடத்தில்
சத்யதேவும்,
கெஸ்ட்
ரோலில்
பாலிவுட்
நடிகர்
சல்மான்கானும்
நடித்துள்ளனர்.
இப்படம்
தசரா
பண்டிகையையொட்டி
அக்டோபர்
5ம்
தேதி
திரையரங்கில்
வெளியாக
உள்ளது.
லூசிபர்
2019ம்
ஆண்டு
மலையாளத்தில்
வெளியான
லூசிபர்
திரைப்படத்தில்
மலையாள
சூப்பர்
ஸ்டார்
மோகன்
லால்
நடித்திருந்தார்.
நடிகர்
பிருத்விராஜ்
இந்த
படத்தை
இயக்கி
இருந்தார்.
பாக்ஸ்
ஆஃபிஸில்
கலெக்ஷனை
அள்ளிய
திரைப்படம்
இது.
மஞ்சுவாரியர்,
விவேக்
ஓபராய்
ஆகியோரும்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்து
இருந்தனர்.
லூசிபர்
படத்தின்
2ம்
பாகமும்
தயாராக
உள்ளது.

காட்ஃபாதர்
லூசிபர்
திரைப்படத்திற்கு
கிடைத்த
வரவேற்பை
அடுத்து
இப்படம்
தெலுங்கில்
காட்ஃபாதர்
என்ற
பெயரில்
உருவாகி
உள்ளது.
நடிகர்,ஜெயம்
ரவியின்
அண்ணன்
ஜெயம்
ராஜா
இந்தப்
படத்தை
இயக்கியுள்ளார்.
சிரஞ்சீவியுடன்
நயன்தாரா,
சத்யதேவ்,
சுனில்,
புரி
ஜெகன்னாத்
உள்ளிட்டோர்
இடம்பெற்றுள்ளனர்.
சிறப்பு
தோற்றத்தில்
சல்மான்
கான்
நடித்துள்ளார்.

கவனம்
ஈர்த்த
டீசர்
மிகப்
பெரும்
பொருட்
செலவில்
உருவாக்கப்பட்டுள்ள
இந்தப்படத்தை
ராம்சரண்,
ஆர்பி
சவுத்ரி,
எம்.வி
பிரசாத்
ஆகியோர்
இணைந்து
தயாரித்துள்ளனர்.
தமன்
இசையமைக்க
ஒளிப்பதிவை
நீரவ்ஷா
கவனித்துள்ளார்.
இப்படத்தின்
டீசர்
சமீபத்தில்
வெளியாகி
படத்தின்
மீதான
எதிர்பார்ப்பை
மேலும்
அதிகரித்துள்ளது.

முக்கிய
தகவல்
இந்நிலையில்,
காட்ஃபாதர்
திரைப்படத்தின்
முக்கிய
அப்டேட்டை
படக்குழு
வெளியிட்டுள்ளது.
அதில்,
தமன்
இசையில்
உருவாகியுள்ள
முதல்
பாடல்
வரும்
செப்டம்பர்
15ஆம்
தேதி
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி
இப்பாடலின்
ப்ரோமோ
ஒன்றும்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
படம்
வரும்
அக்டோபர்
5ஆம்
தேதி
உலகம்
முழுவதும்
உள்ள
திரையரங்குகளில்
வெளியாக
உள்ளது.
சிரஞ்சீவி
நடிப்பில்
கடைசியாக
வெளிவந்த
ஆச்சாரியா
படம்
எதிர்பார்த்த
வெற்றியை
பெறாததால்,
காட்பாதர்
திரைப்படத்தை
ரசிகர்கள்
எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.