புதுடில்லி: ஒரு பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பை, ஒருவர் வெளியில் எடுக்க முயற்சிப்பது போன்ற, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் மட்டுமல்லாமல் வினோதமான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் சில சம்பவங்கள் உண்மையாக இருந்தாலும், பெரும்பாலான சம்பவங்கள்போலியாக உள்ளன.சமீபத்தில் ஒரு பெண்ணின் காதுக்குள் சிறிய பாம்பு இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.அந்த வீடியோவில், பாம்பின் தலைப் பகுதி காதுக்கு வெளியில் உள்ளது.
அதை கையுறை அணிந்திருக்கும் டாக்டர் போன்ற ஒருவர், சிறிய கருவி வாயிலாக வெளியில் எடுக்க முயற்சிக்கிறார். பலமுறை முயன்றும்அந்த பாம்பை வெளியில் எடுக்க முடியவில்லை. அந்த வீடியோவில் இறுதி வரை பெண் மற்றும் பாம்பை எடுக்க முயற்சிப்பவரின் முகங்கள் காட்டப்படவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரமும் இல்லை.
இறுதியில் அந்த பாம்பு, பெண்ணின் காதில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு விட்டதா என்பதும் தெரியவில்லை. இதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ‘இது போலியான வீடியோ. பார்ப்பவர்களை முட்டாளாக்குவதற்காக இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுகின்றனர்’ என்றும் சிலர் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement