மூன்றரை வயது பெண் குழந்தையை வேனில் வைத்து… பஸ் டிரைவரும், பெண்ணும் சிக்கியது எப்படி?

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வன்கொடுமைகளும் நித்தமும் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அதன்படி மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் மூன்றரை வயது பெண் குழந்தையை அதே பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றுபவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கும் கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இதுபோக இந்த சம்பவத்துக்கு உறுதுணையாகவும் குற்றத்தை மறைக்கவும் பெண் ஒருவர் இருந்திருக்கிறார்.
சம்பவத்தை அடுத்து வீட்டுக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததை அறிந்த தாயார், குழந்தையிடம் விசாரித்த போது நடந்ததை கூறியிருக்கிறார். இதனையடுத்து பள்ளிக்குச் சென்று நிர்வாகிகளிடம் விசாரித்த போது அவர்கள் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
உடனடியாக காவல்துறையிடம் புகார் தெரிவித்ததும் குழந்தையை வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்த பள்ளி பஸ் டிரைவர் மீது போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததோடு, இந்த சம்பவத்துக்கு பக்கபலமாக இருந்த பெண்ணையும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை மூடி மறைக்க பார்த்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.