22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 2 நாள் பயணமாக உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தான் செல்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் சீனா அதிபரும் கலந்துகொள்ளும் நிலையில், அவருடன் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பின் 22 ஆவது உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது.  இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த அமைப்புகளின் தலைவர்கள் குழுவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யப்பட உள்ளதாகவும்,  இந்த அமைப்பின் நடவடிக்கைகளினம் மூலம் கிடைத்துள்ள பலன்கள் குறித்து மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.   மேலும், எதிர்காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்து பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உஸ்பெகிஸ்தான் அதிபரின் அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்கும்  பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

பெங்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, இந்தியா, ரஷியா, கஜஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.