இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக… சாதனைப் படைத்த திமுக… நாயகனான அண்ணா!

மாணவர் பேரவை:
1931 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார் அண்ணா. அப்போதே, தமது மொழிப்புலமையாலும், மேடை பேச்சாலும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த அவர், கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே கல்லூரி பொருளாதாரத் துறையின் மாணவர் சங்க தலைவராகவும் அண்ணா பொறுப்பேற்றார்.

நீதிக் கட்சியில் ஐக்கியம்:
பட்டப்படிப்பு முடித்த கையோடு, காஞ்சிபுரம் நகராட்சியில் சில மாதங்கள் எழுத்தர் பணி, அதன்பின் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் ள்ளியில் தமிழாசிரியர் பணி என்று காலம் ஓடிக் கொண்டிருக்க, பிராமணர் அல்லாதோரின் அரசியல் இயக்கமாக இருந்துவந்த நீதிக் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார் அண்ணா.

கல்வியைப் பரவலாக்குவது, அரசுத் துறைகளில் பிராமணர் அல்லாதவர்களை பணி அமர்த்துவது போன்ற பல திட்டங்கள் நீதிக் கட்சியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், நீதிக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் நிலவுடைமையாளர்களாகவும், பிரிட்டிஷ் அரசின் பதவி, பட்டங்களை தாங்கியவர்களாகவும் திகழ்ந்தனர். இது அந்த தலைவர்களை ஏழை. எளிய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இருந்ததன் விளைவாக து நீதிக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் அண்ணா துரையின் வருகை நீதிக் கட்சிக்கு புதுஉத்வேகத்தை ஊட்டியது.

அண்ணாவின் தலைவரான பெரியார்: 1
935ம் ஆண்டு திருப்பூரில் நடை பெற்ற செங்குந்த இளைஞர் மாநாட்டில்தான் பெரியாரை முதன்முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது, பெரியார் தன்னைப் பார்த்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். படிக்கிறேன்; பரீட்சை எழுதியிருக்கிறேன் என்று பதிலளித்த தம்மிடம், உத்தியோகம் பார்க்கப் போகிறாயா என்று அவர் கேட்டதாகவும், இல்லை… பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று தான் பதில் அளித்தாகவும், அன்று முதல் அவர் என் தலைவர் ஆனார்’ என்று பெரியாருடனான தமது சந்திப்பிலேயே அவருடன் நிகழ்த்திய சுவாரஸ்யமான உரையாடலை 1949 இல்
திமுக
தொடக்க விழாவில் நினைவு கூர்ந்தார் அண்ணா.

அண்ணா கொள்கையிலிருந்து திமுக வழிதவறுகிறதா?

முன்னதாக, 1937 இல் ஈரோடு சென்ற அண்ணா, அங்கு பெரியாரின் குடியரசு, விடுதலை ஆகிய தினசரிகளின் துணை ஆசிரியராக பணிபுரிந்தார். 28 வயதில் 60 ரூபாய் சம்பளத்துக்கு பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்த அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், அதே ஆண்டு துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் உயர்ந்த பொறுப்பை அண்ணாவுக்கு அளித்து கெளரவித்தார்.

ஹிந்தி எதிர்ப்பு:
1937 இல் ராஜாஜி தலைமையிலான அரசு பள்ளிகளில் 6-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தியை கட்டாயப் பாடம் ஆக்கியது. பெரியாரும், அண்ணாவும் இதனை எதிர்த்து போராடினர். இதற்காக இருவரும் 1938 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாதமும், பெரியாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தில் இருந்தபோதே பெரியாருக்கு நீதிக் கட்சியின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக் கட்சியையும், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944 இல் திராவிடர் கழகம் உருவானதற்கு வழி வகுத்தது. நீதிக்கட்சியிலும், திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாகவே வலம் வந்தார் அண்ணா.

பெரியாருடன் கருத்து வேறுபாடு:
பெரியாரின் தளபதியாக திகழ்ந்த போதும், தி.க.வினர் கருப்பு சட்டைதான் அணிய வேண்டும் என்ற பெரியாரின் கருத்தில் உடன்பாடு இல்லாதவராக இருந்த அண்ணா, தி.த. கூட்டங்களுக்கு வெள்ளைச் சட்டை அணிந்து வந்தார். இது பெரியாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இருவரும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட கருப்பு -வெள்ளை சட்டை விவகாரம் ஆரம்பமாக அமைய, தமது 70 ஆவது வயதில் தம்மைவிட 40 வயது இளையவரான மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டது திராவிடர் கழகத்துக்குள் புயலை கிளப்பியது.

lதிமுக உதயம்:
இது வெறும் திருமணம் மட்டுமல்ல, தமக்கு பிறகு தனது மனைவியான மணியம்மையை திராவிடர் கழகத்தின் தலைவராக்க பெரியார் திட்டமிட்டுள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது. பெரியாரின் இந்த செயலில் அதிருப்தி அடைந்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, 1949 செப்டம்பர் 17 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) உருவாக்கினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார்.

மூதல் தேர்தல்:
ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இயக்கமாகவே செயல்பட்டு வந்த திமுக, 1957 இல் நடைபெற்ற இரண்டாவது சட்டமன்ற பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார்.

இரண்டாவது தேர்தல்:
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், அந்த தேர்தலில் அண்ணா தோல்வியை தழுவினார்.

வரலாற்று சாதனை: 1
967 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய வரலாற்றை படைத்தது திமுக. அதுநாள்வரை தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 1967 பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 179 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

திமுக மட்டும் 137 தொகுதிகளை கைப்பற்றியது. அண்ணா தமிழகத்தின் முதல்வரானார். காங்கிரஸ் கூட்டணி வெறும் 51 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லாத, ஒரு மாநில கட்சி சட்டமன்ற தேர்தலில வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவே முதல்முறை. திமுகலின் இந்த வரலாற்று சாதனையின் நாயகனாக இன்றும் திகழ்கிறார் அண்ணா என்ற அண்ணாதுரை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.