கருவாடு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளும் பெண்களுக்கு கருவாடு பதனிடும் இயந்திரம் – கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாடு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலேயே அமைச்சரினால் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பெறுமதியான இயந்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது நிலையங்களின் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன்,  நன்னீர் பாசி வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க நிலையங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு,  உடனடியாக மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.