கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாடு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.
இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலேயே அமைச்சரினால் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பெறுமதியான இயந்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.