காஷ்மீரில் பஸ் விபத்து: 4 பேர் பலி| Dinamalar

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்சிலிருந்து ரஜோரி நோக்கி இன்று காலை பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தபோது மஞ்சகோட் தாலுகா, பீம்பெர் காலி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் விழுந்த பஸ்சில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்கும் பணியில், காவல்துறை, ராணுவம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.