ஹைதராபாத்:
டோலிவுட்டை
சேர்ந்த
24
வயது
நடிகையை
பாலியல்
பலாத்காரம்
செய்த
ஃபிட்னஸ்
டிரைனரை
மும்பை
போலீஸார்
அதிரடியாக
கைது
செய்துள்ளனர்.
தென்னிந்திய
படங்களில்
நடித்து
வந்த
அந்த
பிரபல
நடிகைக்கும்
ஃபிட்னஸ்
டிரைனர்
ஆதித்யா
அஜய்
கபூர்
என்பவருக்கும்
நட்பு
ஏற்பட்டு,
இருவரும்
காதலித்து
வந்துள்ளனர்.
திருமணம்
செய்து
கொள்வதாக
ஆசை
வார்த்தைகளை
காட்டி
நடிகையுடன்
உறவு
கொண்ட
ஆதித்யா
அஜய்
கபூர்
நடிகையை
கொடுமை
கொடுக்க
ஆரம்பித்ததும்
அவர்
மீது
நடிகை
பரபரப்பு
புகார்
அளித்துள்ளார்.
லாக்டவுனில்
பழக்கம்
2021ம்
ஆண்டு
ஆகஸ்ட்
மாதம்
நண்பர்
ஒருவர்
வீட்டில்
இருவரும்
சந்தித்துள்ளனர்.
அதன்
பின்னர்
செல்போன்
நம்பரை
பகிர்ந்து
கொண்ட
இருவரும்
காதல்
வலையில்
விழுந்துள்ளனர்.
நடிகையை
திருமணம்
செய்து
கொள்வதாக
ஆசை
வார்த்தைகளை
கூறி
ஆதித்யா
அஜய்
கபூர்
நடிகையுடன்
பலமுறை
உறவில்
ஈடுபட்டு
வந்ததாக
போலீஸார்
விசாரணையில்
திடுக்கிடும்
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

ரொம்ப
டார்ச்சர்
கொடுக்கிறான்
மும்பையில்
உள்ள
Cuffe
Parade
எனும்
இடத்தில்
வசித்து
வரும்
ஃபிட்னஸ்
டிரைனரின்
வீட்டுக்கு
எல்லாம்
நடிகை
சென்று
வர
ஆரம்பித்ததில்,
அதிகளவு
நடிகைக்கு
அவன்
டார்ச்சர்
கொடுப்பது
தெரிய
வந்தது.
பின்னர்,
அவனிடமிருந்து
தப்பிக்க
வேண்டும்
என
தனது
ஒதுங்கி
இருந்த
நிலையிலும்,
நடிகையை
துரத்தி
வந்து
டார்ச்சர்
கொடுத்துள்ளான்
என
புகாரில்
நடிகை
குறிப்பிட்டுள்ளார்.

கொலை
மிரட்டல்
தான்
சொல்லும்
படி
கேட்டு
நடக்காமல்,
தன்னை
விட்டு
நீங்கி
செல்ல
நினைத்தால்,
நடிகையையும்
அவரது
குடும்பத்தில்
உள்ள
உறவினர்களையும்
கொன்று
விடுவதாகவும்,
நடிகையின்
ஆபாச
புகைப்படங்களை
வெளியிட்டு
விடுவேன்
என்றும்
ஆதித்யா
கொலை
மிரட்டல்
விடுத்த
நிலையில்,
தான்
தற்போது
நடிகை
இதற்கு
மேல்
இந்த
விவகாரத்தில்
பொறுமையாக
இருக்க
முடியாது
என
போலீஸில்
புகார்
அளித்துள்ளார்.

ஃபிட்னஸ்
டிரைனர்
கைது
நடிகை
கொடுத்த
பலாத்கார
புகாரை
தொடர்ந்து
மும்பை
போலீஸார்
ஆதித்யா
அஜய்
கபூரை
கைது
செய்து
விசாரித்து
வருகின்றனர்.
அவன்
மீது
376,
323,
504,
506(2),
67,
மற்றும்
67(A)
உள்ளிட்ட
பிரிவுகளில்
போலீஸார்
வழக்கு
பதிவு
செய்துள்ளனர்.