ஆவின் பொருள்கள் விலை உயர்வு: தமிழக மக்கள் அதிருப்தி!

ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் இனிப்பு தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவன இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் குலோப்ஜாமூன் 250 கிராம் 80 ரூபாயிலிருந்து 100ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுல்லா 200 கிராம் 80 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், பேரீச்சை கோவா 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், இனிப்பற்ற பால்கோவா ஒரு கிலோ 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

பால்பேடா 250 கிராம் 110 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும், மைசூர்பா 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஆவின் பால், தயிர் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.