காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி மங்கலம்மாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (35). இவர் தண்டரை கூட்ரோட்டில் முடி வெட்டும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் சேர்ப்பாக்கத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தண்டரைக் கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சக்திவேல் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.