ஆசிரியரின் அலட்சியம்! – 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கி தவித்த 7 வயது சிறுமி

சரியாக கவனிக்காமல் ஆசிரியர் வகுப்பறையை பூட்டிவிட்டுச் சென்றதால் 7 வயது சிறுமி ஒருவர் 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கித்தவித்த சம்பவம் உ.பியில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தொகுதி கல்வி அதிகாரி போப் சிங் கூறுகையில், குன்னாவூர் தாலுகாவின் தானாரி பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்புக்குள்ளேயே இருந்திருக்கிறாள். ஆனால் வகுப்பு ஆசிரியர் மாணவியை கவனிக்காமல் உள்ளேயே வைத்துப் பூட்டிச் சென்றுவிட்டார். மறுநாள் காலை பள்ளி திறக்கப்பட்டபோது தான் சிறுமி உள்ளேயே இருந்தது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் மாணவி தற்போது நலமாக உள்ளார். இது அலட்சியத்தால் நடந்த ஓர் நிகழ்வு, எனவே பள்ளியின் ஒட்டுமொத்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.
image
சிறுமியின் மாமா இதுகுறித்து கூறுகையில், ’’பள்ளி முடிந்தும் மாணவி வீடு திரும்பாமல் போகவே, சிறுமியின் பாட்டி பள்ளிக்குச் சென்று அதே ஆசிரியரிடம் விசாரித்துள்ளார். ஆனால் வகுப்பறைக்குள் யாரும் இல்லை என அவர் கூறிவிட்டார். குழந்தையை காணவில்லை என குடும்பமே காட்டுப்பகுதிகளில் கூட தேடினோம். இருப்பினும் எங்கும் கிடைக்கவில்லை. புதன்கிழமை காலை 8 மணிக்கு பள்ளி திறக்கப்பட்ட போதுதான் சிறுமி வகுப்பறைக்குள்ளேயே வைத்து பூட்டப்பட்டது தெரியவந்தது. இரவு முழுவதும் சிறுமி தனியாக உள்ளேயே இருந்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.