சென்னை: தமிழகத்தில் ரூ.3000 கோடிக்கு மேலான அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ரேவர் கருவி மூலம் அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் எனவும் இந்து அறநிலையத்துறை சொத்துக்கள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
