
தொண்டு நிறுவனம் தொடங்கிய கிரித்தி ஷெட்டி
தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அதன்பிறகு சியாம் சிங்கா ராய், பங்கார் ராஜூ, தமிழ், தெலுங்கில் வெளியான தி வாரியர் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடிக்கிறார்.
கிரித்தி ஷெட்டி சமீபத்தில் தான் சினிமாவுக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவர் நிஷ்னா என்ற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛ஓராண்டு சினிமா பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு காரணமாக இருந்த அனைருக்கும் எனது நன்றி. எனது வாழ்க்கை பயணத்தில் புதிய அங்கமாக 'நிஷ்னா' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். நிஷ்னா என்பது எனது பெற்றோர்களின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சொல். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் என்னால் இயன்ற உதவிகளை எனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் செய்ய இருக்கிறேன். இதற்கு உங்களின் வழிகாட்டுதலும், ஆதரவும் வேண்டும்'' என்கிறார்.