அக்.9-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு 

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் 9-ம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பாக திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ” செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.