“அரசியல் இல்லாமல், விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்" – சொல்கிறார் அண்ணாமலை

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.கவின் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 60 பா.ஜ.க மாவட்ட அமைப்புகளில் மோடி கபடி லீக் போட்டி நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இறுதிப்போட்டி மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மோடி கபாடி லீக் இறுதி சுற்று

மோடி கபடி லீக் இறுதி போட்டிக்கான தொடக்க விழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், தமிழ்நாடு கபடி கழகத்தின் தலைவரும் மதுரை மாநகராட்சி அ.தி.மு.க தலைவருமான சோலை ராஜா, அண்ணாமலையை புகழ்ந்து பேசி வீரவாள் பரிசளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “அரசியல் இல்லாமல் விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த கபடி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது கபடி போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்க பதக்கம் வெல்லும். இந்த கபடி போட்டி பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது.

அண்ணாமலை

மதுரை மண்ணில்தான் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்று பிரமாண்டமாக கபடி போட்டியை யாரும் நடத்தவில்லை.

விளையாடுவதால் நல்ல மனிதர்களாக மாறுகின்றனர். இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.15 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் வழங்கவுள்ளோம்.

இதுவரை இந்த கபடி போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 61,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீட்டில், நாட்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விளையாட்டு போட்டியை பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கலந்துகொண்ட கபாடி வீரர்கள்

கபடி விளையாட்டுக்கான சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் தமிழகத்திற்கு கொண்டுவருவது எங்களது பொறுப்பு. ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜாவை டெல்லி அழைத்துச்சென்று இதனை செய்வோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.