இந்தியாவில் 118 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு நிலை

இந்தியாவில் 118 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு (27) நேற்று  வெளியிட்டது.

இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 118 நாட்களில் பதிவான மிகக்குறைவான தினசரி கொரோனா பாதிப்பாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 இலட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 37 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரத்து 967 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.