தென்காசி அருகே தீண்டாமை வன்கொடுமை? ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்த ஐகோர்ட் கிளை ஆணை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தீண்டாமை வன்கொடுமை நடந்ததாக புகார் கூறிய வழக்கில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்தவரை இறப்பு நிழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மனுதாக்கல் செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணை கோரிய மதிவாணன் என்பவரின் வழக்கை அக்டோபர் 12க்கு ஒத்திவைத்து நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப் உத்தரவிட்டனர்.      

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.