கஞ்சா பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு சங்க தலைவர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.

கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் சோழவந்தான் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கருப்பட்டி பகுதியில்.சோழவந்தான் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்வகுமார் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டு விசாரணை நடத்தியதில் அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது உறுதியானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.