புதுடெல்லி: அண்மையில் குஜராத் சென்றிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் உப்பு உற்பத்தியில் 76 சதவீதத்தை குஜராத் பூர்த்தி செய்கிறது. குஜராத் உற்பத்தி செய்யும் உப்பை அனைத்து இந்தியர்களும் உட்கொள்கின்றனர்” என்றார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் எம்.பி. உதித் ராஜ் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார்.
இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உதித் ராஜுக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதன் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.