கோல்கட்டா துர்கா பூஜையையொட்டி சிலைகளை கரைக்க முயன்றபோது ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எட்டு பேரின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிவாரண உதவியை அறிவித்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஜல்பைகுரி மாவட்டத்தில் மால் நதியில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட, எட்டு பேர் உயிரிழந்தனர். ஆற்றில் சிக்கிய, 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த, 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாயும்பிரதமர் நிவாரண நிதியில்இருந்து நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement