திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியயை ஒருவர் ஆடிப்பாடி பயிற்சி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் துர்காலய சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி என்பவர் பயிற்சி வகுப்பில் ஆடியப்பாடி பயிற்சி அளித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/10/164398.webp.webp.webp)