இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை புகையிலை விற்பனைக்கு தடை விதித்து தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்தத் தடையை நீக்க வேண்டும் என இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பதற்கு தடையில்லை.
விவசாயிகளிடம் புகையிலையைப் பெற்று, வெல்லம் கலந்த நீர் தெளித்து, வேதியியல் பொருட்கள் சேர்க்காமல் விற்பனை செய்யலாம். இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்துவதற்கும், விற்பனைக்கும் அதிகாரிகள் விதித்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.