கோவை பந்த்… பாஜகவில் வெடித்த சீனியர், ஜூனியர் பனிப்போர்?

நாடே தீபாவளி பண்டிகையை குதூகலமாய் கொண்டாட ஆயுதமாகி கொண்டிருந்தபோது, கோவை மாநகர மக்களுக்கு மட்டும் இந்த தீபாவளி திகிலான ஒரு அனுபவத்தை அளி்த்து சென்றுள்ளது. தீபாவளிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (அக்டோபர் 23) கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் நிகழ்ந்தது.

இதில் பலியானவரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்கள் இந்த சம்பவம் குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடை தேடும விதமாக. இச்சம்பவம் குறித்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமைக்கு (NIA) விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து கோவையில் வரும் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜகவின் சீனியர்கள் சிலர் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக, டபாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாகவும், திமுக அரசின் இந்த மிரட்டலுக்கெல்லாம் பாஜக பயப்படாது; திட்டமிட்டப்படி கோவையில் பந்த் நடக்கும்’ என்றும் இன்று பகிரங்மாக அறிவித்தார்

.

அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ‘கோவையில் பந்த் நடத்த பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை எனவும், கட்சி நிர்வாகிகள் சிலரது இந்த அறிவிப்பை தலைமை அங்கீகரிக்கவில்லை’ என்றும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் இந்த விளக்கத்தையடுத்து, கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கோவை பந்த் தொடர்பாக பாஜகவின் சீனியர்கள் சிலரது நிலைப்பாட்டுக்கும், கட்சியின மாநில தலைமையின் நிலைப்பாட்டுக்கும் ஏன் இவ்வளவு முரண்பாடு என்ற கேள்வி எழுந்துள்ளது.

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் பிரபலங்கள் போட்டியிட்டும், தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலு்ம் அக்கட்சி தோல்வியை தழுவியது. இதற்கு தேர்தலில் சீட் கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருந்த தாமரை கட்சிக்காரர்கள் சிலரே, சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் இறங்கியதுதான் முக்கியமான காரணமாக அப்போது கூறப்பட்டது.

மேலும், மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபின், கட்சியில் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று அரசியல் வட்டார்த்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. சில மாதங்களுக்குமுன் தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் அண்ணாமலை. அந்த நியமனத்தில் சீனியர்கள் குரல் பெரிதாக எடுபடவி்ல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இவற்றி்ன் பின்னணியில் பார்க்கும்போது, கோவை பந்த் தொடர்பாக தமிழக பாஜக எடுத்துள்ள இருவேறு நிலைப்பாட்டின் மூலம், கட்சியில் சீனியர்கள், ஜூனியர்கள் இடையேயான பனிப்போர், கோவை கார் சிலிண்டர் விவகாரத்தில் வெடித்துள்ளதோ என்ற ஐயம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கோவையில் முழு அடைப்புக்கு பாஜக மாநிலத் தலைமை அழைப்பு விடுக்கவில்லை தான். ஆனால் அதேசமயம், இந்த விவகாரம் கோவையை மையமாக கொண்டது என்பதால் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அறிவித்தப்படி திங்கள்கிழமை முழுஅடைப்பு நிச்சயம் நடைபெறும்

. கட்சித் தலைமை ஒருவரை தலைவராக அறிவித்துவிட்டால், கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரது தலைமைையை ஏற்றுக்கொண்டு செயல்படதான் வேண்டும். இதில் சீனிய்ர, ஜூனியர் என்ற பேதம் எல்லாம் பார்க்கக்கூடாது. அத்துடன் தமிழக பாஜகவில் சீனியர், ஜூனியர் இடையை பனிப்போர் எல்லாம் எதுவுமில்லை. பிறகெங்கே அது வெடிப்பதற்கு?” என்றார் ஹிந்து பரிவார அமைப்புகளில் நீண்டகாலம் பணியாற்றியுள்ள அந்த நபர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.