சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை  ரயில் முன் தள்ளி கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 13ஆம் தேதி மதிய வேளையில், கல்லூரி செல்ல  ரயில் நிலையம் வந்திருந்த மாணவி சத்யாவை, அவரது காதலர் என்று அறியப்படும் சதீஷ் என்ற நபர், ரயில் முன்தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஒடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சதிஷ்-ஐ நள்ளிரவே கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையிடம், சதீஷ் அளித்த வாக்குமூலத்தில்,  சத்யாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால், அவரது பெற்றோர் சத்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றதால், அவரை ரயிலில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார். தன்னிடம் பழகி வந்த சத்யாவை, அவரது தாய் தன்னிடம் பேசக்கூடாது என்று சத்யாவிடம் வலியுறுத்தியதால், அவர் தன்னுடன் பேசுவதை சத்யா நிறுத்தி விட்டார். இது தனக்கு மன வேதேனையை தந்தது. இருந்தாலும் நான் தொடர்ந்து அவரிடம் பேச முயற்சித்தும், அவர் தன்னை வெறுத்ததால், அவரை கொலை செய்ய வேண்டும் என வெறி ஏற்பட்டது என்று கூறியிருப்பதுடன், அதைத்தொடர்ந்தே, அவரை கொலை செய்யும் நோக்குடன், அவரை 10 நாட்கள் பின்தொடர்ந்து சென்றும், கொல்ல மனமில்லாமல்  திரும்பி வந்துவிட்டதாகவும், இறுதியாக அவரை ரயில் முன் தள்ளிக் கொலை செய்ததாகவும்  ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.