ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: சென்னை மாஜி ராணுவ வீரருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம்: ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாஜி ராணுவ வீரருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை ஆவடி பூம்புழல்நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (49). மாஜி ராணுவ வீரர். கடந்த 2018ம் ஆண்டு கோவையில் இருந்து சென்னை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதே ரயிலில், கோவையை சேர்ந்த 13 வயது சிறுமியும், அவரது தாயும் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது மாஜி ராணுவ வீரரான மகேஸ்வரன், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், அவரை பிடித்து, சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ேபாக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மாஜி ராணுவ வீரர் மகேஸ்வரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை பெற்ற மகேஸ்வரன், கோவையில் தனியார் வங்கி ஒன்றில் தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.