பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்! செந்தில் பாலாஜி

கோவை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று  கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றவர், கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடக்கிறது.

கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.211 சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.  மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதொடங்கி உள்ள நிலையில்,  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள  ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌. மேலும்,  சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரியம் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.