“வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா, உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர், மேற்கத்தியர்கள் வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

மேலும், இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.