பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக ஊடுருவ முயன்ற நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்சாராவின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் ஊடுருவினார். வீரர்கள் அவரை திரும்பி செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வீரர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் இந்திய பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறி வந்ததால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அந்த நபர் உயிரிழந்தார். அந்த பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், வீரர்கள் அங்கு கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.