போதையில் அடம்பிடித்த பயணியை கீழே தள்ளிய அரசு பஸ் கண்டக்டர்: வீடியோ வைரல்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த பஸ், பெங்களூரில் இருந்து வந்தவாசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பழைய பஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ் படிக்கட்டு அருகே போதையில் ஒரு பயணி மட்டும் நின்றுள்ளார். அவர் அவரை கீழே இறங்கும்படி கண்டக்டர் கூறியுள்ளார். ஆனால் அவர் போதையில் கம்பியை பிடித்தபடி இறங்காமல் அடம் பிடித்துள்ளார். இதனால் அவரது கையை வலுக்கட்டாயமாக எடுத்த கண்டக்டர், கீழே தள்ளி உள்ளார். இதில் பயணி கீழே உருண்டு விழுந்தார். இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்ததில் போதை பயணியை கீழே தள்ளிய கண்டக்டர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.