விமானம் – வாகனம் மோதல் பெரு நாட்டில் இருவர் பலி

லிமா,-பெரு நாட்டில், பயணியர் விமானம் ஒன்று ஓடுதளத்தில் செல்கையில், எதிரே வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியாகினர்; விமான பயணியர் உயிர் தப்பினர்

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ௬௧ பயணியரை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டது.

அப்போது, ஓடுதளத்தில் எதிரே வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனம் நொறுங்கி சிதறியது. இதில், வாகனத்தில் சென்ற வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஆனால், விமான பைலட், ஊழியர்கள் மற்றும் பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், 61 பயணியரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், காயமடைந்த ௨௦ பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.