லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர்..!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தரலாம்.

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து தருவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தர பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை விவேகத்துடன் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.